;
Athirady Tamil News

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு: ஜனாதிபதியிடம் கோரிக்கை !!

0

நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு 9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

எனவே தங்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென 9 கட்சிகளின் தலைவர்களும் கடித்தில் வலியுறுத்தியுள்ளனர்

இதேவேளை நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி செயற்படுவதாகவும் 09 கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.