;
Athirady Tamil News

மதுபான அனுமதிப் பத்திரம் வழங்க அங்கிகாரம்!!

0

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மென்மையான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்குறிப்பிட்ட விடயத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நாட்டுக்கு வெளிநாட்டு வருவாயையும் கொண்டு வரவும் உதவும் எனவும் இலங்கையில் சுற்றுலாவுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.