;
Athirady Tamil News

5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய வவுனியா பல்கலை மாணவன்

0

இணையவழி ஊடாக வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பல்கலை மாணவன் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவன் வவுனியா – புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றஙில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.