;
Athirady Tamil News

குறுகிய தூரம் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி..!!

0

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள பாலசோர் சோதனை தளத்தில் நேற்றிரவு செலுத்தி சோதிக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் பெற்ற பிருத்வி- 2 ஏவுகணை, 350 கி.மீ. தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது. 1000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் சுமந்து செல்ல இதை பயன்படுத்த முடியும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.