;
Athirady Tamil News

பிரதமர் மோடி நாளை கர்நாடகா பயணம்- ரெயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!!

0

பிரதமர் மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.நாளை பெங்களூருவில் ரூ.27000 கோடி மதிப்பிலான ரெயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட விஸ்வேஸ்வரய்யா ரெயில் நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பெங்களூரு கண்டோன்மென்ட் யஷ்வந்த்பூர் சந்திப்பு ரெயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பார்த்தசாரதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழக புதிய வளாகத்தை பெங்களூருவில் பிரதமர் திறந்து வைக்கிறார். மைசூருவில் உள்ள ஸ்ரீ சுத்தூர் மடத்துக்குச் செல்லும் பிரதமர்,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலுக்குச் செல்கிறார். 8வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாளை மறுநாள் காலை 6.30 மணியளவில்,மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.