;
Athirady Tamil News

போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற முதியவர் கோர்ட்டில் தற்கொலை முயற்சி..!!

0

திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கணேசன் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கணேசனுக்கு 48 ஆண்டுகள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு கூறினார். இதனை கேட்டதும் கோர்ட்டு வளாகத்தில் கணேசன் தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை போலீசார் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.