;
Athirady Tamil News

ராஜஸ்தான்: கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!!

0

ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் கத்து ஷியாம்ஜி கோவில் உள்ளது. அந்த கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க வந்த பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே காத்திருந்தனர். இந்த நிலையில், அதிகாலை 5 மணியளவில் கோவில் கதவு திறக்கப்பட்டது. இதனையடுத்து, கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனைவரும் முயன்றனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவருக்கு பின்னால் இருந்தவர்களும் அடுத்தடுத்து விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து கோவிலுக்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுப்பி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.