;
Athirady Tamil News

எரிபொருளை பதுக்கிய ஒருவர் கைது!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதற்கமைய முல்லைத்தீவு செம்மலை,பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த எரிபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்த 45 லீற்றர் டீசல், 21 லீற்றர் பெட்றோல் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், 50 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட பெருங்குற்றப்பிரிவினரின் நடவடிக்கையில் குறித்த நபர் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.