;
Athirady Tamil News

பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து அவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவு ம்செய்தியாளர் தெரிவித்தார்.

UPDATE – 3.55 PM

கொழும்பு – யூனியன் பிளேஸ் மற்றும் நகர மண்டபத்திற்கு இடையிலான வீதி பொலிஸாரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.