;
Athirady Tamil News

பொலிஸ் வாரத்தினை முன்னிட்டு கோப்பாயில் பொலிசாரினால் மரதன் ஓட்டப்போட்டி முன்னெடுப்பு!! (வீடியோ)

0

156 வதுபொலிஸ் வீரர்கள் தினத்தை பொலிஸ் திணைக்களத்தினால்இம்மாதம் 3ம் திகதி தொடக்கம் 10 ம் திகதிவரை நாடு பூராகவும் பொலிஸ் வாரம் அனுஷ்டிக்கப்படுவதோடு ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் சமூகமட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்

பொலிஸ் வாரத்தினை முன்னிட்டு கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிசாரினால் மரதன் ஓட்டப்போட்டி முன்னெடுக்கப்பட்டது

இன்று காலை கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான மருதன் ஓட்ட போட்டி கல்வியங்காட்டு சந்தி ஊடாக பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியை வந்நடைந்து அவ்வழியே கோப்பாய் சந்தியினூடாக மீண்டும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது

அமைதியான முறையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு இடம் பெற்றமரதன் ஓட்ட போட்டியில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பற்றியதோடு மருதன் ஓட்ட போட்டியில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.