;
Athirady Tamil News

ராணி கையெழுத்து போட்டால்தான் இங்கிலாந்து சட்டங்கள் செல்லும்..!!

0

* இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஒன்று அவருடைய உண்மையான பிறந்தநாள். மற்றொன்று அரசு எடுக்கும் விழா. இது ஜூன் மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமை கொண்டாடப்படும். அதன்படி, ஜூன் 5, 2021-ல் எளிமையாக கொண்டாடப்பட்டது.

* உண்மையான பிறந்தநாள் அன்று மூன்று இடங்களில் 41, 21, 62 என துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை உண்டு.

* ராணியாக பதவி ஏற்று 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை நான்கு நாள் விழாவாக, பக்கிங்ஹாம் அரண்மனை கொண்டாடியது.

* ராணி எலிசபெத்தால் முன் போல், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக நேரடி பங்கேற்பை குறைத்துக்கொண்டே வந்தார்.

* அவருடைய மகன் சார்லஸ், ராணியின் பணிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.

* ராணி ஆண்டுக்கு 2,000-த்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். உடல்நலம் குறைந்ததால் திருமண வரவேற்பு, அரச குடும்பத்து நிகழ்வுகள், தோட்ட பார்டிகள் நடக்கும்போது இவற்றில் ராணி சார்பாக அவரது குடும்பத்தினர் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

* காமன்வெல்த் மற்றும் பல நாடுகளில் நடக்கும் தேசிய நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்கள், ராணி சார்பாக குடும்பத்தினர் பங்கேற்பர். குறைந்தது 3,000 பொது நிகழ்ச்சி இயக்கங்களுக்கு தலைவராகவோ அல்லது போஷகராகவோ இருந்தார் ராணி.

* அரண்மனைக்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் கடிதங்கள் வரும். அவை அனைத்துக்கும் ராணி சார்பில் பதில் எழுதி அனுப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து, ராணிதான் பரிசு வழங்குவார்.

* ராணியின் அரண்மனையில் அவர் புழக்கத்துக்கென்று, தனி ஏ.டி.எம். உண்டு.

* ராணிக்கென தனியாக கவிஞரை நியமித்துக் கொள்ளலாம்.

* இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்.

* மேல் சபையின், லார்ட்ஸ் என்ற கவுரவம் மிக்க பதவிக்கு, வியாபாரம், கலை மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் சாதித்தவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பர். அதற்கு ராணியின் ஒப்புதல் பெற வேண்டும்.

* அரசு அமைக்க, உத்தரவிட ராணிக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேபோல் கலைக்கவும் முழு அதிகாரம் உண்டு.

* மதத்தின் தலைவி. சர்ச் ஆப் இங்கிலாந்தின் தலைவியான ராணிதான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டரின்போது தன் வயதுக்கு ஏற்ப சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு வெள்ளி காசுகளை வழங்கி கவுரவிப்பார்.

* ராணியை கைது செய்ய முடியாது. வழக்கு போட முடியாது. அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்.

* ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எந்த நாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால், ராணியின் குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் தேவை.

* எதற்கும் வரி கட்ட வேண்டாம். ஆனால் 1992-ம் ஆண்டு முதல் ராணி சொந்த விருப்பத்தின்படி வரி கட்டி வந்தார்.

* தேம்ஸ் நதியில் குறிப்பிட்ட தூரத்திற்குள் நீந்தும் வாத்துகள் அனைத்தும் ராணிக்கு சொந்தம். * கடலின் கரையை ஒட்டிய 5 கி.மீ. தூரத்தில் பிடிபடும் கடற்பன்றிகள், உணவுக்கு பயன்படும் பெரிய மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் ராணிக்கு சொந்தமாகும்.

* ஆண்டிகுவா, படுவா, திபகாமாஸ், பார்புடா, பெலிஸ், கனடா, க்ரேனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்பா நியூகயானா, செயின்ட் கீட்ஸ், நெவிஸ், க்ரேனாடைன்ஸ், காலமன் தீவுகள் மற்றும் துவலு நாடுகளுக்கும், எலிசபெத் தான் ராணியாக இருந்தார். இனி அவரது மகன் சார்லஸ் ராஜாவாக இருப்பார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.