;
Athirady Tamil News

ஸ்ரீநாராயண குருவின் 168-வது ஜெயந்தி தினம்: பினராயி விஜயன் பங்கேற்பு..!!

0

கேரளாவை சேர்ந்த பிரபல சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குரு. கேரள மாநிலம் செம்பழந்தி, வயல்வரம் பகுதியில் பிறந்த ஸ்ரீநாராயண குரு கேரள மக்களின் சமூக மேம்பாட்டிற்கு பாடுபட்டவர். இவரது 168-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது பிறந்த ஊரான வயல்வரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.

மேலும் செம்பழந்தி குருகுலத்தில் நடைபெறும் ஸ்ரீநாராயண குரு மகா சம்மேளனத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு சிவகிரியில் பேரணி நடக்கிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் மாநாட்டை மத்திய மந்திரி முரளீதரன் தொடங்கி வைக்கிறார். இதில் ஸ்ரீநாராயண தர்ம சங்க அறக்கட்டளை தலைவர் சுவாமி சச்சிதானந்தா, பொது செயலாளர் சுவாமி சாரதானந்தா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.