;
Athirady Tamil News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி..!!

0

பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது சீனா, இந்தியா, ரஷியா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பினா்களை கொண்டதாகும்.

உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பின் வருடாந்தர உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமா்கண்ட் நகரில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். இதற்காக பிரதமர் மோடி வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.