;
Athirady Tamil News

நாளை நியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி !!

0

ஐக்கிய நாடுகள் சபையின் 77 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (19) நியூயோர்க் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான பொதுச்சபையின் 77 ஆவது அமர்வு செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.