;
Athirady Tamil News

யாழில். பாதுகாப்பற்ற புகையிரக்கடவையில் விபத்து – இளைஞன் படுகாயம்

0

யாழ்ப்பாணத்தில் புகையிரதம் – மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சனிக்கிழமை பயணித்த சொகுசு புகையிரதத்துடன் , அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞன் புகையிரதம் மோதி விபத்துக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குறித்த புகையிரத கடவை பாதுகாப்பற்ற கடவையாக காணப்படும் நிலையில் , விபத்து சம்பவங்கள் இடம்பெற்ற நிலையிலும் அதனை பாதுகாப்பான புகையிரத கடவையாக மாற்றம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் , தொடர்ந்து அது பாதுகாப்பற்ற கடவையாகவே காணப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.