;
Athirady Tamil News

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது- 4 பேர் பலியான சோகம்..!!

0

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ்நகரில் 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. 30 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், 5 குடும்பங்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.