;
Athirady Tamil News

எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்!!

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முதல் (04) விநியோக சேவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை முதல் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றொலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

செயற்பாட்டுக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பணம் நேற்று கழிக்கப்பட்டிருந்ததாகவும் அது மீண்டும் இன்று வங்கிகளில் வரவு வைக்கப்பட்டதையடுத்தே பகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விநியோகஸ்தர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக இன்றையதினம் பல எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.