;
Athirady Tamil News

டெல்லியில் உள்ள காந்திநகர் மார்க்கெட் ஜவுளி சந்தையில் பயங்கர தீ விபத்து.. ஏராளமான துணிகள் தீயில் எரிந்து நாசம்..!!

0

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு டெல்லியில் உள்ள காந்தி நகர் மார்க்கெட் துணி சந்தையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டு மெல்ல அப்பகுதியில் உள்ள பிற கடைகளிலும் பரவியது. இதனால் சுற்றுப்புறம் முழுவதும் புகை மண்டலமாக பரவியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.எனினும், தகவல் கிடைத்ததும் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறுகிய தெருக்களில் இந்த கடைகள் அமைந்துள்ளதால் தீயணைப்பு வாகனங்கள் வெகுதொலைவில் நிறுத்தப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது. மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தீ விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.