;
Athirady Tamil News

மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!!

0

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றினால் குறித்த நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நீண்ட காலமாக தேடி வந்த நிலையில் , குறித்த நபர் யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடி கட்டட பகுதியில் பதுங்கி இருப்பதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழு குறித்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் அந்நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.