;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா தினசரி பலி 1 ஆக குறைந்தது..!!

0

இந்தியாவில் புதிதாக 2,112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரத்து 748 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் நேற்று மேற்கு வங்கத்தில் மட்டும் ஒருவர் இறந்துள்ளார். இதுதவிர கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,957 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,102 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 748 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24,043 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 994 குறைவு ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.