;
Athirady Tamil News

மலப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – 3 பேர் கைது..!!

0

மலப்புரம் வழியாக ஹவாலா பணம் காரில் கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் தாசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையொட்டி பெருந்தல் மன்னா போலீசார் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சூர் பகுதியில் இருந்து ஒரு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. இதனை கவனித்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் பின் பகுதியில் ஒரு ரகசிய அறையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருப்பது. அதில் மொத்தம் 52 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரிய வந்தது. இவரிடம் போலீசார் இந்த பணம் குறித்து விசாரணை செய்தபோது முறையான பதில்களை தெரிவிக்கவில்லை. பணத்தைக் கொண்டு வருவதற்கு அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லை.

இதனால் போலீசார் கார் மற்றும் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காரில் இருந்த முஜீப் (வயது 32). முகமது (29), மற்றும் முகமது அலி (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பெருந்தல் மன்னா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.