;
Athirady Tamil News

காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை”- பிரதமர் மோடி யோசனை..!!

0

அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:- நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ஒரே நாடு ஒரே சீருடை என்பது காவல்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு யோசனைதான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருவங்கள். 5, 50 அல்லது 100 ஆண்டுகளில் இந்த யோசனை நடைமுறைக்கு வரலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள். நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதுகிறேன். காவல்துறையைப் பற்றி நல்ல கருத்தைப் பேணுவது மிக முக்கியமானது. இங்கே உள்ள தவறுகள் கவனிக்கப்பட வேண்டும். காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து செயல்திறன், அதன் சிறந்த விளைவு மற்றும் சாமானியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சிறந்த முடிவுகளை அடைவதற்கு காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மனித நுண்ணறிவை உருவாக்கும் நல்ல பழைய அமைப்புமுறையை பலப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.