;
Athirady Tamil News

போதையில் பெண்களின் கையை பிடித்து இழுத்த ஆண் தலைமறைவு-பொலிஸார் வலைவிரிப்பு!!

0

போதையில் பெண்களின் கையைப் பிடித்து இழுத்த ஆண் ஒருவருக்கு எதிராக இன்று இரவு (22) வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள புத்தகக்கடை ஒன்றில் வேலை செய்யும் அராலி மத்தியைச் சேர்ந்த இரு பெண்கள் கடமை முடித்து இன்று மாலை வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேளை, அராலி மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே நிறைபோதையில் வந்து அவர்களின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்துக் குறித்த நபரின் பெற்றோர் மற்றும் உறவினர் வீடுகளுக்குப் பொலிஸார் சென்று அவரைத் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்துக் குறித்த நபரை வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் நாளை காலை 8.00 மணிக்கு முற்படுத்துமாறு அவரது உறவினர்களைப் பொலிஸார் எச்சரித்துச் சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.