;
Athirady Tamil News

10 வயது சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை..!!

0

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த ஜமுக்கா கிராமத்தை சேர்ந்தவர் தான் தேவி (வயது 33). தான் தேவிக்கு குழந்தை இல்லை. எனவே அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்து தனது குறையை கூறினார். அந்த மந்திரவாதி, தான் தேவிக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் சிறுவன் ஒருவனின் ரத்தத்தை முகத்தில் பூசி கொள்வதோடு, அதனை குடிக்கவும் வேண்டும் எனக் கூறினார்.

மந்திரவாதி கூறியதை அப்படியே நம்பிய தான்தேவி, தான் குழந்தை பெற சிறுவன் ஒருவனை கொன்று ரத்தம் குடிக்க முடிவு செய்தார். இதையடுத்து தனது பக்கத்து வீட்டில் வசித்தவரின் 10 வயது சிறுவனை கடத்தி அவனை கொன்றார். பின்னர் அந்த சிறுவனின் ரத்தத்தை உடலிலும், முகத்திலும் பூசியதோடு, அதனை குடிக்கவும் செய்தார். இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி நடந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பரேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுவனை கொன்றதாக தான் தேவி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு பரேலி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொன்று ரத்தம் குடித்த பெண் தான் தேவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இத்தீர்ப்பு பற்றி சிறுவனின் பெற்றோர் கூறும்போது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி இருக்க வேண்டும். கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு போதுமானதாக இல்லை, என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.