;
Athirady Tamil News

கொரோனா பரவல் எதிரொலி – புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்..!!

0

பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் பரவலை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதைப்போல பிற வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது இடங்கள், கடற்கரை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் அனைவரும் கட்டாயம் முக கவம் அணிய வேண்டும். புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு தடை. அனைத்து கல்வி நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.