;
Athirady Tamil News

ஆலப்புழா ஆற்றில் உல்லாச சவாரி சென்ற போது படகு வீடு கவிழ்ந்து சுற்றுலா பயணி பலி..!!

0

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் படகு வீடுகள் உள்ளன. இந்த படகு வீடுகளில் தேனிலவு தம்பதிகள் அறைஎடுத்து தங்குவது வழக்கம். இதுபோல சுற்றுலா பயணிகளும் இந்த படகு வீடுகளில் ஒரு சில நாட்கள் தங்கி உல்லாச சவாரி செல்வார்கள். இதற்காக ஆலப்புழா ஆற்றில் ஏராளமான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு படகில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டி உள்பட 4 பேர் அறை எடுத்து தங்கினர். அவர்கள் ஆற்றில் உல்லாச சவாரி சென்றுவிட்டு இரவு படகு வீட்டிலேயே தங்கினர். அப்போது படகின் அடிப்பகுதியில் இருந்த பலகை உடைந்தது. இதனால் படகுக்குள் தண்ணீர் புகுந்தது. சிறிது நேரத்தில் படகு வீடு ஆற்றில் மூழ்கியது. இதில் படகு வீட்டில் தங்கியிருந்த ராமச்சந்திர ரெட்டி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே படகு ஆற்றில் மூழ்குவதை கண்ட அக்கம் பக்கத்து படகில் இருந்தவர்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கியவர்களை மீட்டனர். இதில் படகு ஊழியர் உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர். ராமச்சந்திர ரெட்டியின் உடலும் மீட்கப்பட்டது. இதற்கிடையே படகு மூழ்கியது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் ஆற்றில் மூழ்கிய படகின் லைசென்ஸ் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் படகு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.