;
Athirady Tamil News

தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருக்கு சமுக வலைத்தளம் ஊடாக கொலை அச்சுறுத்தல் – கபே அமைப்புக்கு முறைப்பாடு!

0

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினர் எம்.எம்.மொகமட்டுக்கு சமூக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திற்கு (கபே) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு கருத்து தெரிவிக்கும் போது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீம் இதனை தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருக்கு வட்ஸ்அப் ஊடாக தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகாவிடில் அவரை கழுத்தறுத்து கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்து அச்சுறுத்துவதாக தெரிவித்து இன்றைய தினம் கபே அமைப்புக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.