சீரற்ற காலநிலையால் பல ரயில் சேவையில் தாமதம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதான ரயில் பாதையிலும் களனிவெளி பாதையிலும் பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதேவேளை கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசிவருவதனால் மரங்கள் முறித்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.