;
Athirady Tamil News

ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி

0

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஸ்டாா்ஷிப் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட் ஏவிய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சிதறியதால் சோதனையின் முக்கிய இலக்கை அடைய முடியவில்லை.

டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்பேஸ் ஏவுதளத்தில் இருந்து 123 மீட்டா் உயர ஸ்டாா்ஷிப் ராக்கெட், ஒன்பதாவது முறையாக சோதனை முறையில் செலுத்தப்பட்டது. அது ஏந்திச் சென்ற போலி விண்கலம் கட்டுப்பாடு இல்லாமல் இந்தியப் பெருங்கடலை நோக்கி இறங்கியது. அது வெடித்துச் சிதறியதாக ஸ்பேஸ்-எக்ஸ் பின்னா் உறுதிப்படுத்தியது. எரிபொருள் கசிவு காரணமாக விண்கலம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், இந்த முறை முந்தைய இரு சோதனைகளை விட ராக்கெட் சோதனையில் ‘பெரிய முன்னேற்றம்’ காணப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்-எக்ஸ் உரிமையாளா் எலான் மஸ்க் கூறியுள்ளாா்.

முந்தைய இரு ஸ்டாா்ஷிப் சோதனைகளும் கரீபியன் பகுதியைத் தாண்டவில்லை. இந்த ஆண்டு முற்பகுதியில் நடந்த அந்த சோதனைகளின்போது ஏவப்பட்ட சில நிமிஷங்களில் அந்த ராக்கெட்டுகள் வெடித்துச் சிதறியது நினைவுகூரத்தக்கது.

இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதா்களை அனுப்ப நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.