;
Athirady Tamil News

விமானநிலையத்தில் அதிரடியாக கைதான பெண்; பயணப்பொதியில் மறைந்திருந்த பொருள்

0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை – தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரது பயணப்பொதிகளிலிருந்து 23,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 115 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரட்டுகள் 34 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.