;
Athirady Tamil News

கள்ளக்காதலால் மகனின் தாய் கொலை !!

0

பெண்​ணொருவர் படுகொலைச் செய்யப்பட்டு, அவருடைய சடலம் எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட மூவர், சூரியவெவவை வசிப்பிடமாகக் கொண்ட 58 வயதான பெண்ணொருவரை கடத்திச் சென்று இவ்வாறு படுகொலைச் செய்துள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அந்தப் பெண், இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டில் வசித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் மகனுக்கும் ஹோட்டல் உரிமையாளரின் ம​னைவிக்கும் இடையில், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுவே​, இந்த படுகொலைக்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

அவ்விருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையிலேயே அவருடைய தாய், படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டனர் என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.