;
Athirady Tamil News

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!!

0

வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வந்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை பழைய சாரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவர் சேர் பின்னும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன். இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல் நேற்று மாலை பாலமுருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது பாலமுருகனை அவரது தாயார் ரேணுகாதேவி வேலைக்கு எதுவும் செல்லாமல் தினமும் இப்படி மது குடித்து விட்டு வருகிறாயே என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு திரும்பிய ரேணுகாதேவி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து பாலமுருகனை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை ஜெயமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.