;
Athirady Tamil News

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!!

0

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியை சேர்ந்த பண்டிட் ஒருவர், நேற்று முன்தினம் அவந்தி போராவில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் பரிதாபமாக பலியானார். காஷ்மீர் பண்டிட் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

புல்வாமா, பதகம்போரா, அவந்திபோரா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவந்தி போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பிடிக்க முயன்றனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள் தப்பி செல்ல முயன்றனர்.

அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான். இத்தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர். அதில் புல்வாமா மாவட்டம் பதகம்போராவில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர் தொடங்கி உள்ளது.

இதில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அவனது உடல் இன்னும் மீட்கப்படவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளனர். பயங்கரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் சுட்டு கொல்லப்பட்ட 2 நாட்களில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.