;
Athirady Tamil News

புங்குடுதீவில் நடைபெற்ற இருபாலாருக்குமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உதைபந்தாட்டத்தின் வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் புங்குடுதீவிலுள்ள பத்து விளையாட்டு கழகங்களுக்கிடையிலான ஆண் , பெண் இருபாலாருக்குமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் புங்குடுதீவு நண்பர் விளையாட்டு கழக மைதானத்தில் நான்கு தினங்களாக நடைபெற்றிருந்த நிலையில் கடந்த ஞாயிறன்று இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சண்ஸ்ரார் கழகமும் நண்பர்கள் கழகமும் மோதிக்கொண்டன . 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் நண்பர்கள் கழகத்தினர் வெற்றிபெற்றனர்.

ஆண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் நசரத் கழகத்தினரும் சென் சேவியர் கழகத்தினரும் மோதிக்கொண்ட நிலையில் 4 – 1 ஏன்ற கோல்கள் எண்ணிக்கையில் நசரத் கழகத்தினர் வெற்றிபெற்றிருந்தனர்.

இறுதிப்போட்டியில் விருந்தினர்களாக கலந்துகொண்ட தொழிலதிபர் திலீப் , புங்குடுதீவு உலகமையம் நிறுவனத்தின் செயலாளர் கருணாகரன் குணாளன் மற்றும் அனைத்து கழகங்களின் ஒன்றிய உறுப்பினர்களான ஜெயபால் காளிதாஸ் , நா. அழகேசன் , பாலா , சிறீ ஆகியோர் வெற்றிபெற்ற கழகங்களுக்கான கிண்ணங்களையும் , பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.