;
Athirady Tamil News

டெல்லி அரசுப் பள்ளிகளில் மணீஷ் சிசோடியா ஆதரவு பிரசார இயக்கமா? பாஜகவின் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு!!

0

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக டெல்லி அரசுப் பள்ளிகளில் ‘ஐ லவ் மணீஷ் சிசோடியா’ என்ற பெயரில் பிரசார இயக்கத்தை உருவாக்கி வருவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. சிசோடியாவை கைது செய்தபிறகும், டெல்லி அரசு கல்வி என்ற பெயரில் தனது மோசமான அரசியலை நிறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளை அதில் ஈடுபடுத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

இது வருத்தமளிக்கும் விஷயம் என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் விமர்சித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக பிரசார இயக்கம் நடைபெறுவதாக கூறி புகைப்படங்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இதை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற செயல்களில் எந்த ஒரு அரசு துறையும், அரசு ஊழியர்க்கும் ஈடுபடவில்லை. அது பாஜகவின் வேலை, என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.