;
Athirady Tamil News

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் மத நல்லிணக்க பாதயாத்திரை..!

0

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூசை வழுபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமான பாதயாத்திரை சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு சென்று அங்கு விசேட வழிபாடுகள், சந்நிதியான் ஆச்சிரம உபசரணைகள், உதவிகளுடன் கருத்துரைகள் என்பன இடம் பெற்றதை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது. குறித்த பாதயாத்திரையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து இளைஞர்கள் இணைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த பாத யாத்திரையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்து இளைஞர்கள் இணைந்து செல்லவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர்கள் சேவைகள் மன்ற பணிப்பாளர் வினோதினி சிறிமோகன் தலமையில் ஆரம்பமான நிகழ்வுகளில் வடக்கு மாகாண இளைஞர்கள் சேவை மன்ற பணிப்பாளர் ஜெமினி சந்திரசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டு யாத்திரிகர்களை வழியனுப்பிவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.