;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ.114.29 கோடி!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.114.29 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 34 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

7 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 682 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக் கட்டாக்களில் 24 ஆயிரத்து 291 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 32 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.