;
Athirady Tamil News

20 வருடங்களாக வெறும்காலுடன் நடக்கும் நபர் – வித்தியாசமாக பார்க்கும் சமூகம்!

0

வெயில் காலத்திலும், பனி காலத்திலும் அமெரிக்காவில் ஒரு நபர் 20 ஆண்டுகளாக வெறுங்காலுடன் நடக்கிறார்.

59 வயது திரு ஜோசஃப் டீருவோ எனும் நபரே இவ்வாறு காலணி இல்லாமல் நடக்கும் பழக்கத்தை கொண்டவர்.

குறித்த நபரின் பாதத்தில் பினியன் (bunion) எனும் பிரச்சினை உள்ளது, இதனால் காலணிகளை அணிந்தால் வலி ஏற்படும் என்பதால் அவர் அவற்றை அணிவதில்லை.

வெறுங்காலுடன் நடக்கையில் வெயில் காலங்களில் சற்று சிரமத்தை அனுபவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், வீதிகளில் செல்பவர்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதாகவும், சில கடைகள் தன்னை உள்ளே அனுமதிப்பதில்லை எனவும் டீருவோவை கூறுகின்றார்.

இதேவேளை, வெறுங்காலுடன் நடக்கையில் தரை உணர்வுடன் இருப்பது திருப்தியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.