;
Athirady Tamil News

நீங்கள் ஒளிராததால் இந்தியா ஒளிரவில்லை என்றாகி விடாது: ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கண்டனம்!!

0

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 தினங்களுக்கு முன் பேசினார். அப்போது அவர் இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் அளிக்கும் விதத்தில் டெல்லியில் நேற்று கூறியதாவது:- இந்தியாவை பற்றி ஒட்டுமொத்த உலகமும் நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.

ஆனால் அதன் முக்கிய எதிர்க்கட்சித்தலைவர் ராகுல், அன்னிய மண்ணில் இந்தியாவை பலவாறாக அவதூறாக பேசி உள்ளார். உலகமே இந்தியா ஒளிர்வதாக பார்க்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதற்காக சீனாவை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் ஒளிர்கிற குழந்தை அல்ல என்பதால், உங்கள் பரம்பரைக் கட்சியில் நீங்கள் ஒளிர்கிற குழந்தை அல்ல என்பதால், இந்தியாவும் ஒளிராத நாடு என்றாகி விடாது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.