;
Athirady Tamil News

கொவிட் இன் புதிய அலை தொடர்பில் சுகாதாரதுறை எச்சரிக்கை

0

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில் மீண்டும் அச்சுறுத்துவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறினார்.

இது ஓமிக்ரானின் துணை வகை என்றும், உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பின் கீழ் ஒரு மாறுபாடாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

புதிய மாறுபாடு முதன்முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் அடையாளம் காணப்பட்டது. அப்போதிருந்து, இந்த மாறுபாடு பல நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறினார்.

எனவே , பொதுமக்கள் முடிந்தவரை சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.