;
Athirady Tamil News

கண்ணிமைக்கும் நொடியில்… 8000 உக்ரைன் மக்களை கொத்தாக பலிவாங்கிய ரஷ்ய தளபதி படுகொலை

0

8,000 உக்ரேனிய மக்களைக் கொன்ற தாக்குதல்களுக்குப் பின்னால் செயல்பட்ட ஓய்வுபெற்ற ரஷ்ய தளபதி, ஒரு தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.

உக்ரைன் ஈடுபட்டிருக்கலாம்
உக்ரைன் துறைமுக நகரமான மரியுபோல் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல்களில் பங்கேற்றதற்காக பல பதக்கங்களைப் பெற்றவர் 34 வயதான தளபதி Zaur Gurtsiev.

வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருடன் சேர்ந்து கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் குண்டுவெடிப்புக்கு சற்று முன்பு குர்ட்சியேவை அணுகியதாகக் கூறப்படுகிறது.

கடுமையான குற்றங்களை விசாரிக்கும் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு, பல மாடி கட்டிடத்திற்கு வெளியே வியாழக்கிழமை பலத்த காயங்களுடன் இருவரின் உடல்களை கண்டெடுத்ததாகக் கூறியது.

இருவரின் மரணத்தைத் தொடர்ந்து ரஷ்ய அதிகாரிகள் தற்போது குற்றவியல் வழக்கைத் தொடங்கியுள்ளனர். குண்டுவெடிப்புக்கான பின்னனி தொடர்பில் விசாரித்து வருவதாக கூறும் ரஷ்ய அதிகாரிகள், உக்ரைனின் ஈடுபாட்டிற்கான சாத்தியக்கூறை நிராகரிக்கவில்லை.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், இது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என்றும், கையெறி குண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. 34 வயதான குர்ட்சியேவ் ஸ்டாவ்ரோபோலின் பிராந்திய நிர்வாகத்திற்கு நியமிக்கப்படவிருந்தார்.

பல மாதங்களாக தீவிர முயற்சி
உக்ரைன் போரில் கலந்துகொண்ட உயர்மட்ட ரஷ்ய அதிகாரிகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து குர்ட்சியேவின் மரணம் நிகழ்ந்துள்ளது.

டிசம்பரில், ரஷ்ய இராணுவத்தின் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதப் பிரிவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மாஸ்கோவில் நடந்த ஒரு குண்டுவெடிப்பில் அவரது பிரதி அதிகாரியுடன் கொல்லப்பட்டார்.

கடந்த மாதம், மாஸ்கோவில் மூத்த ரஷ்ய ஜெனரல்-லெப்டினன்ட் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், சமீபத்திய நாட்களில் அதிகரித்த ரஷ்ய குண்டுவீச்சு நடவடிக்கை ஒரே இரவில் அமைதியானதாகவும்,

உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை குறிவைக்கும் ரஷ்ய ட்ரோன்களின் எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கெட் வேகத்தில் உயரும்
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உந்துதலைப் பெறவும் அமெரிக்கா தலைமையிலான அதிகாரிகள் பல மாதங்களாக தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்த போதிலும், ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.