;
Athirady Tamil News

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம்

0

சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் மாவட்ட மட்ட கொடித் தின நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல்

“வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள்” – போதையிலிருந்து மீண்டெழுங்கள் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் – (2025- மே 31 – ஜீன் 17)
மாவட்ட மட்ட கொடித் தின நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எவ்.சி.சத்தியசோதி தலைமையில் இன்றைய தினம் (2025.05.31) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, சமுர்த்தி கொடி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி ஆளுமை அரங்கம் சிறுவர் கழக உறுப்பினர்களினால் பிரதம விருந்தினர், சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர், மாவட்டச் செயலக சமுர்த்தி திணைக்களக் கணக்காளர், ஆகியோருக்கு கொடி அணிவித்து சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தோடு இணைந்ததான சமுர்த்தி கொடிதின நிதி சேகரிப்பு நிகழ்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச மட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சாம்ராட் சமுதாய மட்ட அமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இராஜாங்கம் சமுதாய மட்ட அமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சக்கரவர்த்தி சமுதாய மட்ட அமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.