;
Athirady Tamil News

இலவச கண்புரை சத்திரசிகிச்சை; பதிவு செய்ய கோரிக்கை!!

0

இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்கு பதிவு செய்யுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில், யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம்கள் பின்தங்கிய பிரதேசங்களில் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன.

இதன்பிரகாரம் நாளை சனிக்கிழமை(11) காலை 9 மணி தொடக்கம் இரண்டாவது கண்பரிசோதனை முகாம் வேலணை பிரதேச வைத்தியசாலை, மற்றும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.