;
Athirady Tamil News

2-வது நாளாக சரிவு: கொரோனா தினசரி பாதிப்பு 402 ஆக குறைந்தது !!

0

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 113 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 500-ஐ தாண்டி இருந்தது. அதாவது ஒரே நாளில் 524 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. நேற்று பாதிப்பு 444 ஆக குறைந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 91 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 306 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 94 அதிகரித்துள்ளது. அதாவது 3,903 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று இமாச்சலபிரதேசம், கர்நாடகாவில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,784 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.