;
Athirady Tamil News

மருதமுனையில் மாணவர் படிப்பகம் திறந்து வைப்பு

0
video link-
 

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மாணவர் படிப்பகம் புதன்கிழமை(28) இரவு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்வியலாளர்கள், ஊர் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் கல்வியில் மேலதிக திறமைகளை ஊக்குவிப்பதற்கான பல வழிகள் உள்ளன. குறிப்பாக, மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணர உதவும் கல்வி முறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் வழிகாட்டல் முறைகளைத் தூண்டலாம். இதோடு, தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி,மொழிப் பயிற்சி, கலை மற்றும் விளையாட்டுப் பாடத்திட்டங்கள்,சமூகப் பணி, மற்றும் தன்னார்வத் தொண்டு போன்றவற்றை கல்வி முறையின் ஒரு அங்கமாக இணைத்து மேலதிக திறமைகளை இவ்வாறான படிப்பகம் ஊடாக ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டகின்றது.

அத்துடன் .சமூகத்தில் ஒரு பயனுள்ள அங்கமாக இருக்க உதவுகின்ற கல்வியினால் எதிர்காலத்தில் சமூகத்திற்கு திறமையான, பயனுள்ள நபர்களை உருவாக்க முடியும் என குறித்த நிகழ்வில் கலந்த கொண்டோர் குறிப்பிட்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.