;
Athirady Tamil News

உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!!

0

உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி, எனினும் போதிய வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு இந்த கடன் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின்கீழ் ஒரு மாணவர் 11 லட்சம் ரூபாய்களை கடனாக பெற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடனை அவர்கள் உயர் கல்வியை நிறைவு செய்து தொழிலுக்கு சென்றதன் பின்னர் திருப்பிச் செலுத்த முடியும் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.