;
Athirady Tamil News

மஹிந்த, மைத்திரி சந்திரிகாவும் பொறுப்பு !!

0

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே விரும்புவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டினார்.

கம்பஹா, சீதுவ, கிழக்கு மூகலங்கமுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பல்நோக்கு கட்டடத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் தேவையற்ற வேலைநிறுத்தம் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தடைப்படலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “இன்று மொட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களை கிராமத்திற்கு வர அனுமதிக்கக் கூடாது என சிலர் கூறுகின்றனர். இன்று எந்தவோர் அரசியல் கட்சியையும் விட மொட்டுவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிராமங்களுக்குச் சென்று வேலை செய்வதற்கு உரிமை உள்ளது. ஏனென்றால் நம் கைகளில் இரத்தம் இல்லை. நாங்கள் மக்களைக் கொல்லவில்லை, அரச சொத்துக்களை அழிக்கவில்லை.

அத்தகைய கட்சியின் பிரதிநிதிகள் நாங்கள். மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் அந்த அழுக்குப் பெயர்களைக் கேட்கும் திறன் உள்ளது. எங்கள் கட்சி உழைத்தவர்களைக் கொண்ட கட்சி. உங்கள் எல்லோரையும் விட, கிராமத்துக்குச் சென்று வேலை செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.

துரதிஷ்டவசமாக கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2021/2022 க்குள் கோவிட் தொற்றுநோயுடன் இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை நாங்கள் அறிவோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில் கூறியது என்ன?பாராளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து சிறப்புரிமைகளையும் ஒழித்தார். வாகன அனுமதி பறிக்கப்பட்டது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தியாகங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

நெருக்கடி ஏற்பட்டபோதும், மக்கள் அழுத்தத்தில் இருந்தபோதும், நாட்டில் போராட்டம் என்ற பெயரிலான ஏதோ ஒன்றுக்கு அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். என்று சொல்லப்படும் போராட்டம் மூலம் நாடு வளர்ச்சியடைந்ததா? பொருளாதாரத்தை மீட்க முடிந்ததா? அப்படி எதுவும் நடக்கவில்லை.

அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டும். கடந்த ஆண்டு எரிபொருள் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. வெளிநாடுகளில் இருந்து எண்ணெய், மருந்து, எரிவாயு கொண்டு வர டொலர்கள் இல்லாமல் போனது.

அப்படியொரு காலகட்டத்தை நாங்கள் எதிர்கொண்டோம். அன்றைய தினம் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் சபையில் இருந்து வெளியேறி அனைவரையும் இந்த நாட்டைப் பொறுப்பேற்க அழைத்தனர்.

போராடுவதற்கு பலர் இருந்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். என்னைப் போல யாரும் அவரை விமர்சிக்கவில்லை. அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டை நினைத்து அவருக்கு உதவி செய்தோம்.

இன்று ரூபாயின் மதிப்பு படிப்படியாக வலுவடைந்து வருகிறது. அதற்கேற்ப பொருட்களின் விலையும் குறையும். சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கிராமங்களில் உள்ள நயவஞ்சகர்கள் இப்போது வேதனைப்படுகிறார்கள்.

225 திருடர்கள் என்று வரும்போது மூன்று பேரை மட்டும் பிரிக்க முடியாது. அந்த மூன்று பேரும் இன்று நாம் ஒன்றும் செய்யாதது போல் இருக்கிறார்கள். அந்த அரசியல் கட்சி சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஆட்சிக்கு கொண்டு வர உழைத்தது. 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும் என்றால், இந்தக் கட்சிகளும் அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

அரச ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கூடுதலான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் துறைமுக ஊழியர்களே. அர்கள் குறைந்தபட்ச ஊதியம் பெறுபவருக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். அவர்கள்தான் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.