;
Athirady Tamil News

டெல்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம்- பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்!!

0

டெல்லியில் கெஜ்ரிவால் அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மணீஷ் சிசோடியாவுக்கு பதிலாக கைலாஷ் கெலாட் தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. இதனால் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவில்லை.

இதை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- டெல்லி பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம் நாட்டின் 75 ஆண்டு கால வரலாற்றில் மாநில பட்ஜெட் நிறுத்தப்படுவது இதுவே முதல்-முறையாகும். டெல்லி மக்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.