;
Athirady Tamil News

பொலிஸார் பலருக்கு கசந்தது!!

0

இந்த ஆண்டில் இதுவரையில் பொலிஸ் உத்தியோகத்திலிருந்த 260 அதிகாரிகள் முன்னறிவித்தலின்றி பொலிஸ் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுள் கொன்ஸ்டபிள் மற்றும் சார்ஜென்ட்களே அதிகமானோர் எனவும் தெரியவருகிறது.

இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சினைகள், அதிக வேலை மற்றும் கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டில் மாத்திரம் பொலிஸ் சேவையிலிருந்து மொத்தமாக 900 பொலிஸ் அதிகாரிகள் விலகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.