;
Athirady Tamil News

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை!!

0

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை காத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (09) நண்பகல் 12.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

ஆணைக்குழுக்கள் நியமனம் தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது, தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்களின் நியமனங்களை தாமதப்படுத்துவது வீண் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆணைக்குழுக்களை விரைவில் நியமித்து முடிப்பேன் என நம்புகிறேன், ஏற்கனவே அரசியலமைப்பு சபையினால் ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.